28.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சிலாங்கூர் அரசு சார்பில் 1,805 விவசாயிகளுக்கு உதவித் திட்டங்கள்!

கோவிட் நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட 1,805 விவசாயிகளுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி வரை 813,900 வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கித்தா சிலாங்கூர் 1.0 உதவித் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு கால்நடைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கான தீவனங்கள், பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று தெரிவித்தார். சிலாங்கூரிலுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவும் அதேவேளையில் மாநிலத்தில் உணவு விநியோகம் சீராக உள்ளதை உறுதி செய்வதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles