
நாடாளுமன்ற சபாநாயகரை மாற்றும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் ஜெலுத்தோங் எம்பி
ஆர் எஸ் என் ராயாருக்கும் துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ ரஸிட்டிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது
துணை சபாநாயகர் அவர்களே, சட்டத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள். மக்கள் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெட்கமாக இருக்கிறது என்று ஆர் எஸ் என் ராயர் குறிப்பிட்டார்.
இந்த வார்த்தையை வாபஸ் பெறுங்கள் என்று பலமுறை துணை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் ராயர் இந்த வார்த்தையை வாபஸ் பெறவில்லை. இதனால் அவரை 2 நாள் இடைநீக்கம் செய்வதாக துணை சபாநாயகர் உத்தரவிட்டார்.
