
கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயற்சித்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுபினர்களுக்கு அபராதம் விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உள்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார்.
அரசு ஒரு போதும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மற்றவர்களுடன் வேறுபடுத்திப் பார்க்கும் இரட்டைப் போக்குச் சட்டத்தைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை.
எந்த இடத்திலும் எந்த கூட்டமும் நடத்தப்படக் கூடாது. அந்த வகையில் Sop விதிமுறைகளை மீறியதால் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அரசு-எதிர்கட்சியினரிடையே உள்ள ஒத்துழைப்பு மற்றும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினுடனானக் கலந்துரையாடலின் மூலம் அந்த அபராதத் தொகை மக்களுக்கு விதிக்கப்படுவதைப் போல் குறைக்கப்படும்.
3,000 வெள்ளி அபராதம் 1,000 வெற்றியாக குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
