
வரும் பொதுத் தேர்தலில் மக்கள் சக்தி போட்டியிடும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார் 14ஆவது தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி அடைந்த பிறகு ,தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் பல சிதறி ஓடிய நிலையில், தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளான மக்கள் சக்தி, ஐ.பி.எப் போன்ற கட்சிகள் தேசிய முன்னணிக்குப் பக்கபலமாக இருந்தார்கள் என டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். பல தேர்தலில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தேசிய முன்னணியின் வெற்றிக்காக உழைத்த இவர்களது விசுவாசம் போற்றதற்குரியது. அடுத்தப் பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய முன்னணியின் கீழ் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் போட்டியிட மக்கள் சக்திக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
