
பினாங்கு மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தென் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள கலிடோனியா தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் பெருமையளிப்பதாக பினாங்கு மாநில உரிமைக்குரல் இயக்கத்தின் தலைவர் க.இராமன் கூறினார். தோட்ட வளப்பத்திற்காக உழைத்த பாட்டாளிகளை வெறுமனே கைவிடக்கூடாது என்ற துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் கனவும்,லட்சியமும் இன்று நிறைவேறியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பாக இந்தியர்களின் உரிமைகள் மற்றும் நலனில் பினாங்கு மாநில அரசாங்கமும், எகோவெல்டு மேம்பாட்டு நிறுவனமும் மேற்கொண்டுள்ள இந்த மனிதாபிமான திட்டத்திற்கு இயக்கத்தின் சார்பில் அவர் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எகோவெல்டு மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரி டத்தோஸ்ரீ சுந்தரராஜுவும் பேராசிரியர் பி.இராமசாமியும் பாராட்டுக்குறியவர்கள் என்று அவர் சொன்னார்.
