27.9 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் 22 தொகுதிகளில் 300 கிளைகள் அமைப்பு மீரா கட்சி தலைவர் கேபி சாமி அறிவிப்பு

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 22 தொகுதிகளில் 300 கிளைகள் ஒரு மாதத்தில் அமைக்கப்படும் என்று மீரா கட்சியின் தேசிய தலைவர் கேபி சாமி தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தில் 22 தொகுதிகளில் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒரு மாதத்தில் 300 கிளைகள் அமைக்கப்பட்டு அதன் பாரங்கள் அனைத்தும் சங்கங்களின் பதிவு இலாகா விடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தில் மீராவுக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது. அதிகமானோர் கட்சியில் இணைவதற்கு ஆர்வம் செலுத்தி வருவது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார். மீரா கட்சிக்கு உதவித் தலைவர்களாக டத்தோ குமார் அம்மன் மற்றும் சிப்பாங் மணியம் பொறுப்பேற்றது முதல் கட்சி பலம் அடைந்திருப்பதாக அவர் சொன்னார். மீரா கட்சிக்கு எதிராக கீழூறுப்பு வேலைகள் செய்தாலும் நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles