
வரும் பொதுத் தேர்தலில் அம்னோ கட்சியுடன் பெர்சத்து ஒத்துழைப்பதா என்பது தொடர்பில் இதுவரை எதுவும் தெளிவாக தெரியவில்லை என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். பெர்சத்துவுடன் ஒத்துழைக்க அம்னோ முன் வந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போது தேசிய மற்றும் மாநில ரீதியில் அமனோவுடன் உறவு நீடிக்கிறது. அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றினால் நாங்களும் ஒத்துழைக்க தயார். ஒருவேளை ஒத்துழைக்க மறுத்தால் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்களை எதிர்த்து நாங்களும் போட்டியிடுவோம் என்று அவர் சொன்னார்.
