
டத்தோ குமார் அம்மன் கோரிக்கை துறைமுகங்களில் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் forwarding நிறுவனங்களில் 51 விழுக்காடு பங்கு பூமிபுத்ராவுக்கு வழங்க நிபந்தனை விதிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று என்று மீரா கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ குமார் அம்மன் தெரிவித்தார். இது திட்டமிட்டபடி ஆண்டு இறுதிக்குள் ஒரு கொள்கை போல் அமல்படுத்தப்பட்டு விட்டால் forwarding நிறுவன துறையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி விடுவார்கள். இதனால் இவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவார்கள். இப்போதைக்கு இது தேவையில்லாத ஒன்று என்ன இது அமுல்படுத்துவது தொடர்பில் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
