
நவம்பர் 4ஆம் தேதி இந்து பெருமக்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங் மற்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் ஆகியோர் தலைமையில் 500 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. பத்து ஆராங்,ரவாங், கன்றி ஹோம்ஸ், சுங்கை துவா, கோல காரிங் உட்பட சுற்று வட்டாரங்களை சேர்ந்த வசதி குறைந்த மக்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

செலாயாங் கவுன்சிலர் ஏண்டி முனியாண்டி உட்பட கிராமத் தலைவர்களும் வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு கிடைப்பதற்கு உதவி புரிந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருநாளை முன்னிட்டு செலாயாங் நாடாளுமன்ற தொகுதியில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
