
பினாங்கு மாநில முத்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில்,பிரபல தொழிலதிபர் காளிதாஸ் குமரவேல் ஆதரவில் 50 பெண்களுக்கு பஞ்சாபி உடைகள் மற்றும் 20 ஆண்களுக்கு வேட்டிகளும் தீபாவளி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்,இந்த உதவி வழங்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சமூக சேவையாளர் இளங்கோவன் கூறினார். தனது தலைமையில் சங்கத்தின் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பேராதரவு வழங்கி உதவிக்கரம் நீட்டிய தொழிலதிபர் காளிதாஸ் குமரவேலுவுக்கு, எழுத்தாளருமான இளங்கோவன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
