
வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் தமது பந்தாய் குண்டோர் சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்வதாக அதன் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ நோர் அஸ்மான் தெரிவித்தார். இங்குள்ள மக்களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்கி இருக்கிறேன். அனைத்து சமூகத்தினருக்குச் சேவை வழங்குவதில் இதுதான் என் முதல் தவணை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இந்த 3 ஆண்டுகளில் அனைத்துத் தொகுதிகளையும் நான் வலம் வந்து விட்டேன். அதில் சொந்த தொழில் செய்வோர், புறநகரில் வேலை செய்வோர், பொதுச்சேவைத் துறையினர், தனியார் துறையினர் என பலரை நான் சந்தித்து விட்டேன். மக்களுக்கு மீண்டும் சிறந்த முறையில் சேவையை வழங்க முடியும் என்பதால் தொகுதியை தற்காத்துக் கொள்ள போட்டியிடுகிறேன் என்றார் அவர்.
