
100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் நேற்றைய தினத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை கண்டு உலகமே வியக்கிறது. தடுப்பூசி போட்ட ஒவ்வொருவருக்கும் இந்த சாதனையில் பங்கு உண்டு. 100 கோடி என்பது அவர்களது வெற்றி. இந்த சாதனை என்பது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம். 100 கோடி தடுப்பூசி என்ற வலிமையான கேடயத்தை நாடு பெற்றுள்ளது. இந்த சாதனை படைக்க காரணமான தடுப்பூசி நிறுவன பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்களை பாராட்டுகின்றேன் என்று அவர் கூறினார்
