
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிள்ளான் லிட்டில் இந்தியாவுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி நேற்று சிறப்பு வருகை புரிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது கிள்ளான் நகரில் புகழ் பெற்ற கேபி சாமி டிராவல்ஸ் அலுவலகத்திற்கு வருகை புரிந்த அவருக்கு கேபி சாமி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பித்தார். பிரபல அரசியல் பிரமுகரான கேபி சாமி குடும்பத்தினர் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியுடன் உரையாடி மகிழ்ந்து தங்களது விமான பயணங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
