
மழைக்காலம் முடியும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களில் 771 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த மழையால் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை மழை நீர் தேங்கி இருக்கும். ஆனால், இந்த முறை தேங்கி இருந்த மழை நீர், மழை விட்டதும் வடிந்துவிட்டது. மேலும், மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறினார்
