
சரவா மாநிலத் தேர்தலின் போது இங்கு வந்து பிரசாரம் செய்ய விரும்பும் எந்த தீபகற்ப மலேசிய அரசியல் தலைவருக்கும் ஜி.பி.எஸ். தடை விதிக்காது என்று பி.பி.பி. கட்சித் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ அப்துல் காரிம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார். இருந்த போதிலும் இங்கு வந்து சேர்வதற்கு முன்பு அவர்கள் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்த முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் சரவாவில் வந்து சேர்ந்ததும் எஸ்.ஒ.பி.யையும் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்றார்.



