
நேற்று நள்ளிரவு தொடங்கி பெய்த கடும் மழையால் ஜோர்ஜ்டவுன் ஜாலான் பேராக் மற்றும் ஜாலான் பி.ரம்லி ஆகிய கம்பத்து பகுதிகளில் ஒன்பது வீடுகள் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் குடியிருப்பாளர்கள் சுமார் ஐந்து மணி நேரம் வெள்ளத்தால் தத்தளித்தனர். அதிகாலை 4 மணி முதல் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காலை 9 மணிக்கு வெள்ளம் சீரடையத் தொடங்கியது. முக்கிய சாலைகளான ஜாலான் மெக்லும் ஜாலான் கம்போங் மஸ்ஜித் ஹாசிம் யாஹ்யா,ஜாலான் பேராக்,ஜாலான் பி.ரம்லி மற்றும் சுங்கை பினாங் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது வெள்ளம் சிறுக சிறுக சீரடைந்து வருகிறது.



