
தாம் அமைத்த வீட்டைப் பராமரிக்க மாதந்தோறும் 10,000 வெள்ளி மற்றும் ஓய்வூதியத்தைத் தவிர 22 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்து எதையும் கோரவில்லை என்று பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை சுட்டிக்காட்டி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் குறிப்பிட்டுள்ளார். நான் பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற போது புத்ராஜெயாவில் எனக்கு இலவசமாக ஒரு துண்டு நிலம் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் நான் அதை நிராகரித்து விட்டேன். அதற்கு பதிலக பொதுச்சேவை ஊழியர்களுக்குத் தருவிக்கப்படும் விலையில் புத்ராஜெயாவில் நான் நிலத்தை வாங்கினேன். ஒவ்வோர் ஆண்டும் அதற்கு .6,071 வெள்ளி நிலவரி மற்றும் 1,792 வெள்ளி மதிப்பீட்டு வரியும் செலுத்தி வருகிறேன் என்றார் அவர்.



