
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பெரிக்கத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த பதவியையும் கோரவில்லை என்று பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர், வான் சைஃபுல் வான் ஜான் உறுதியாகக் கூறினார். மலாக்கா மாநில அரசில் பெரிக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்களும் இணைய வேண்டும் என்ற விவகாரம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. பெரிக்காத்தானின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த பதவியையும் கேட்டதில்லை என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன் என்றார் அவர்.



