
முடிந்த மலாக்கா மாநில இடைதேர்தலின் தோல்வியை ஒரு படிப்பிணை என்பதனை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் மாறாக ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதால் எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை என ஜோகூர் ஜசெக சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார். நமது அணுகு முறையில் ஏற்பட்ட தப்புகளே நமது தோல்விக்கான காரணம் என்பதை நினைவில் கொண்டு, புதிய செயல் திட்டம் தீட்டி அதனை செயல்படுத்துவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என மேலும் அவர் நினைவுறுத்தினார். மலாக்கா மாநில தேர்தலை ஒரு படிப்பிணையாக எடுத்து கெண்டு 15வது பொது தேர்தலுக்கு அனைத்து பக்காத்தான் ஹரப்பான் உறுப்பு கட்சிகள் தயாராக வேண்டும் என்பதோடு வேட்பாளர் தேர்வு, கட்சி உட்பூசல், திட்டம் போன்ற விவகாரங்களில் சரியாக கையாண்டால் எதிர்வரும் 15 பொது தேர்தலில் மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதனை கவனத்தில் கொண்டு செயல் பட்டால் மட்டுமே நிலைக்க முடியும் என்று திரு சந்திர சேகரன் குறிப்பிட்டுள்ளார்.



