
உயர்க்கல்வி கூடங்களில் பயிலும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கேசவன் தலா 500 வெள்ளி வழங்கி உதவி புரிந்துள்ளார். உயர்க்கல்வி கூடங்கள் திறக்கப்பட்டிருக்கும் வேலையில் மாணவர்கள் இப்போது கல்வி கற்று வருகிறார்கள். அந்த வகையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 20 மாணவர்களுக்கு தலா 500 வெள்ளியை வழங்கி மாண்புமிகு கேசவன் உதவி புரிந்துள்ளார். இந்த 500 வெள்ளி தொகையில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்கி கொள்ளலாம். மாணவர்களின் சுமையை அறிந்து அவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாக மாண்புமிகு கேசவன் தெரிவித்தார்.
