
தென் ஆப்ரிக்காவில் உருமாற்றமடைந்த ‘ஒமிக்ரான்’ வகை வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து, இந்தியாவில் மக்களும் அதிகாரிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில், கோவிட் பாதிப்பு திடீரென 10 மடங்கு அதிகரித்தது. இதனையடுத்து, நடந்த ஆய்வில், கோவிட் உருமாற்றம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதற்கு ‘ஒமிக்ரான்’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது. இது ‘கவலைக்குரிய வைரஸ் வகை’ என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
