
கடந்த 2018ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வாக்களித்த 20,000 பேர் இம்முறை வாக்களிக்க வராததால்தான் மலாக்கா மாநிலத் தேர்தலில் பி.கே.ஆர். மோசமானத் தோல்வியைத் தழுவியது என்று முன்னாள் கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லி மாலேக் தெரிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி அடைந்ததற்கு இதுதான் காரணம். 20,000 பேர் வாக்களிக்க வராததால் பக்கத்தான் ஹரப்பானுக்கு தோல்வி ஏற்பட்டது என்று அவர் சொன்னார். கெஅடிலான் கட்சி இப்போது புகழ்பெற்ற கட்சியாக இல்லா விட்டாலும் நான் ஏன் இக்கட்சியில் இணைந்தேன் என்றுதான் பெரும்பாலானோர் கேட்கின்றனர் என்றார் அவர்.
