
வரும் சரவா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது என்று கெத்தாரே நாடாளுமன்ற உறுப்பினர், டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார். சரவா கூட்டணிக் கட்சியின் ஜி.பி.எஸ் நெருங்கியத் தோழமைக் கட்சியாக இருப்பதால் சரவா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது. இதற்கு முக்கியக் காரணம் ஜி.பி.எஸ். கட்சிக்கு சரவா மக்கள் வலுவாக ஆதரவளித்து வருவது நமக்குத் தெரியும். இது ஓர் உயர் அடைவுநிலை கொண்ட அரசாகும். அதனால் தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல் முறையாக சரவா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடவில்லை என்றார் அவர்.
