
ஜொகூர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான டாக்டர் மஸ்லி மாலேக் கெஅடிலானில் இணைந்ததை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார். கட்சியின்றி ஓராண்டுக்கும் மேலாக இருந்து விட்ட நிலையில் இப்போது கெஅடிலானில் இணைந்திருப்பது அவர் இருந்த இடத்திற்கே மீண்டும் திரும்பியதைத்தான் காட்டுகிறது என்று அவர் சொன்னார். இதற்கு முன் அம்பாங் கிளையின் கெஅடிலான் உறுப்பினராக கடந்த 2017ஆம் ஆண்டில் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
