
கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா, தென்னமரத் தோட்ட நில குத்தகை தொடர்பில் கடந்த 40 ஆண்டுகாலமாக 400 குடியேற்றவாசிகள் நடத்தி வந்த போராட்டம் மாநில அரசின் தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது குறித்து தாங்கள் மகிழ்ச்சியடைவதாக குடியேற்றவாசிகளின் பிரதிநிதியான வி. ஜெயக்குமார் கூறினார். நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முழு ஈடுபாடு காட்டிய சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கும் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்
