
இங்குள்ள ஜொகூர் புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளி அருகாமையில் அமைந்துள்ள வீடமைப்பு பகுதியில் வேலி அமைக்க படுவதை நிறுத்த கோரி பெற்றோர்கள் அமைதி மறியல் மேற் கொண்டனர். அந்த வேலி அமைப்பதால் பள்ளி மாணவர்களை அழைத்து வரும் பேருந்துக்கும், பெற்றோருக்கு இடைஞ்சல் ஏற்படும் என பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பூவேந்திரன் தெரிவித்தார். இதனிடையே அந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலத்து கொண்ட ஜசெக தலைவர்களில் ஒருவரான சந்திர சேகரன் ஆறுமுகம் பெற்றோர்களின் கோரிக்கை நியாயமாக படுவதாக கூறிப்பிட்டதோடு,அவர்களின் கோரிக்கைக்கு நகராண்மைக கழகம் செவி சாய்க்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். மேலும்,சுற்றுப்புற மக்களும் அந்த வேலி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தார்கள் என்பது இங்கே கூறிப்பிடதக்கது.
