
பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பொதுச்சேவை ஊழியர்களுக்கு 1,200 வெள்ளி போனஸ் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரும் ஜனவரி மாதம் 3ஆவது வாரத்தில் போடப்படும் என்று பகாங் மந்திரி புசார், டத்தோஸ்ரீ வான் ரொஸ்டி தெரிவித்தார். 96 லட்சம் வெள்ளி மதிப்புள்ள ஒதுக்கீட்டில் அனைத்து நிலைகளிலும் உள்ள 8,000 பொதுச்சேவை ஊழியர்களுக்கும் இத்தொகை வழங்கப்படும். இத்தொகை கடந்தாண்டில் வழங்கப்பட்ட .1,000 வெள்ளியை காட்டிலும் அதிகமாகும். இது உண்மையில் பகாங் மாநிலப் பொதுச்சேவை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.
