
கிஸ் ஜ.டி.” எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டத்தின் கீழ் மேலும் அதிகமானோர் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக அந்த திட்டம் ஒருமுகப்படுத்தும் படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு 5,000 கோட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளையில் கடந்த அக்டோபர் மாதம் வரை 1,661 பேர் மட்டுமே உதவி பெற்றுள்ளதாக அவர் சொன்னார். உதவி பெறத் தகுதியுள்ள நிறைய பேர் வெளியில் உள்ளனர். இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் உண்மையில் தனித்து வாழும் தாய்மார் என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில் வருமானம் மற்றும் குடும்ப நிலை தொடர்பான கூடுதல் ஆவணங்களையும் அவர்கள் சமர்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
