
மலேசியாவுக்கு வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க அந்நாட்டின் வெளிநாட்டின் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது என்று மனித வள அமைச்சர், டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். இதற்கு முன் ஒப்புக் கொள்ளப்பட்டத் தோட்டத் தொழில்துறையைத் தவிர அனைத்துத் தொழில்துறைகளிலும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள அமைச்சரவை இணக்கம் தெரிவித்தது. இவர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பு தோட்டத் தொழில்துறை, விவசாயம், உற்பத்தி, சேவை, சுரங்கம், குவாரி, கட்டுமானம், உள்நாட்டுச் சேவைகள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
