
பொதுவில் பட்டியலிடப்பட்ட 2 நிறுவனங்களின் 42 லட்சம் பங்குகளை எம்.ஏ.சி.சி.யின் உயர் அதிகாரி ஒருவர் வைத்திருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.சிவராசா குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டை மக்களவை விசாரணை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அவர் முன்வைத்தார். இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்து கிடைக்காமல் அதிகாரி மற்றும் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட மாட்டாது. கடந்த 2015ஆம் ஆண்டில் அந்த எம்.ஏ.சி.சி உயர் அதிகாரி 9 லட்சத்து 30,000 பங்குகள் கொண்ட நிறுவனத்தின் உரிமையாளராகப் பட்டியலில் இடம் பெற்ற வேளையில், 2016இல் இன்னும் 1 கோடியே 29,000 பங்குகள் கொண்ட நிறுவனத்தின் உரிமையாளராகப் பட்டியலிடப்பட்டதாக சிவராசா கூறினார்.
