
18 வயது வாக்களிப்பை அமல்படுத்தியதற்கு ஏற்ப பல்கலைக்கழக மற்றும் கல்லூரிச் சட்டம் 1971ஐ அரசு அகற்ற வேண்டும் என்று விலாயா மாநிலத்தைச் சேர்ந்த கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பி.பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார். 18 வயது வாக்களிப்பு அமல்படுத்தப்பட்டு விடதால் மாணவர்களின் சுதந்திரத்தை தடுக்க அரசு இச்சட்டத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது நியாயமில்லை. என்னைப் பொறுத்தவரை 18 வயது வாக்களிப்பு அடுத்தாண்டில் அமல்படுத்தப்படும் என்பதால் இச்சட்டத்தை உடனடியாக அகற்ற வேண்டும். 18 வயது கொண்ட இளையோரும் தேர்தல் வேட்பாளராக முடியும் என்றால் இதுபோன்ற சட்டங்களைக் கொண்டிருப்பதில் சற்றும் நியாயமில்லை என்று நான் கருதுகிறேன் என்றார் அவர்
