
வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி இந்து பெருமக்கள் தைப்பூசத்தை கொண்டாடுகிறார்கள். இதனை முன்னிட்டு வரும் ஜனவரி 18 ஆம் தேதி கெடா மாநிலத்திற்கும் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று மந்திரி பெசார் முகமட் சனுசி தெரிவித்தார். கெடா மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் தைப்பூசத்துக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படுவது தொடர்பில் முடிவு காணப்பட்டதாக அவர் சொன்னார்.
