
வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரவேற்கும் வகையில் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று தெரிவித்தார். கோவிட் 19 நோய்த்தொற்று காலத்தில் மிகப் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய அளவில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும்படி அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் இரண்டாவது ஒமிக்ரோன் வைரஸ் ஓரி செய்யப்பட்டிருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் இன்று அறிவித்தார்.
