
நாட்டில் பெய்த அடைமழையால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலாங்கூர், பகாங், கிளாந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் கோலாலம்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். வெள்ளத்தினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 34,000 பேர் நிவாரண மைதானங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் , சிப்பாங், ஷா ஆலம், பத்து தீகா, ஸ்ரீ மூடா, செந்தோசா, காப்பார், பண்டமாரான் ஆகிய இடங்களில் வெள்ளம் இன்னமும் சூழ்ந்ததுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.



