
Parti Bangsa Malaysia என்றழைக்கப்படும் இந்த புதிய அரசியல் கட்சி கெஅடிலானுக்கு மிரட்டல் அல்ல என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அமைச்சர் ஸூரைடா கமாரூடின் தலைமையில் இந்த புதிய அரசியல் கட்சிக்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி பதிவு இலாகா அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு துரோகம் இழைத்து வெளியேறியவர்கள் இப்போது புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக கேள்விப்படுகிறோம். இந்த புதிய அரசியல் கட்சியால் எங்களுக்கு என்று ஒரு மிரட்டலும் அல்ல என்று அவர் சொன்னார்
