
நாட்டில் நேற்று வரை மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 352 பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 31 லட்சத்து 34 ஆயிரத்து 179 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 559 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக முடித்துள்ள வேளையில் 28 லட்சத்து 39 ஆயிரத்து 606 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
