
மஸ்லி மாலிக் ஊழல் செய்துள்ளதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது விசாரணை செய்யப்போவதாக கூறியுள்ளதன் அடிப்படையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அந்த முன்னாள் கல்வி அமைச்சர் இந்த ஊழல் தடுப்பு ஆணையம் உண்மையான வகையில் விசாரணை செய்ய உள்ளதா அல்லது முரண்பாடான தகவல்களை முன்வைக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு முன்பு 50 ஆயிரம் வெள்ளி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சொன்ன அந்த ஆணையம் தற்பொழுது அது இரண்டு லட்சம் என்கிறது. நான் ஒரு வெல்ப்யர் (Velfire) வாகனத்தைப் பயன்படுத்தியதாக கூறுகின்றார்கள். அந்த வாகனம் என்னுடையது அல்ல; அது அரசாங்க இலாகாவினுடையது” “அந்த வாகனம் என்னுடைய பெயரில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஊழல் தடுப்பு ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
