
அரசாங்க ஊழியர்களுக்கு நடப்பில் இருக்கும் வெ.1,200 குறைந்தபட்ச ஊதியத்தை, 1,800 வெள்ளியாக உயர்த்தும்படி கியுபெக்ஸ் எனப்படும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்மேளனம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தி இருக்கிறது.
வளர்ச்சி அடையும் நாடு என்னும் கட்டத்தை நோக்கி மலேசியா நகர்வதால், இந்தப் புதிய குறைந்தபட்ச ஊதியப் பரிந்துறை நியாயமானது என்று கியுபெக்ஸ் தலைவர் Datuk Adnan Mat தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள விகிதம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட வேண்டிய பட்சத்தில் , ஆகக் கடைசியாக 2002-இல் இது பரிசீலிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
