
வியட்நாம் இதுவரை 20 நாடுகளுக்கு தனது பன்னாட்டு விமானப் பாதைகளை மீண்டும் திறந்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கம்போடியா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், கத்தார், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லாவோஸ், சீனா, பிரான்ஸ் ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 20 பன்னாட்டு விமானப் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று வியட்நாமிய செய்தி நிறுவனம்-VNA தெரிவித்துள்ளது.
புருனை, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், மக்காவ், பின்லாந்து, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய எட்டு விமானப் பாதைகள் மீண்டும் திறக்கப்படவில்லை என்று அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
