
கிள்ளான் தொகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் நீர்ப்பாசன அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் வடிகால் முறையை சீரமைப்பதற்கான திட்டம் அங்கீகரிப்பதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santiago தெரிவித்தார். சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ Amirudin Shari, கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் தனித்திருக்கும் நடவடிக்கையில் இருந்துவருகிறார். இதனால் இந்த திட்டத்தை அங்கீகரிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக Charles Santiago கூறினார். Taman Melawis-இல் 15 மில்லியன் ரிங்கிட் செலவிலான வெள்ள தடுப்பு திட்டத்திற்கு சிலாங்கூர் மந்திரிபுசார் கையெழுத்திடுவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



