
போர்க்களமாக மாறியுள்ள யுக்ரேனில் இருந்து தாயகம் திரும்பும் இந்திய மாணவர்களிடையே வட இந்திய அதிகாரிகள் பேதமும் பிரிவினையும் பார்ப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். யுக்ரேன் எல்லையைக் கடந்து பக்கத்து நாடுகளுக்குச் சென்று காத்திருக்கும் மாணவர்களை அழைத்துவரும் முயற்சியின்போது, முன்னதாக வந்து காத்திருக்கும் தமிழ் மாணவர்கள் இந்தி மொழியில் பேசாவிட்டால் அவர்கள் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவர்களுக்குப் பின்னால் வரும் இந்தி பேசும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் தெர்விக்கப்படுகிறது.


