
ரஷ்யாவில் உள்ள அனைத்து மலேசியர்களும் ஏறக்குறைய பாதுகாப்பான சூழ்நிலையிலும் அமைதியாகவும் உள்ளனர் என்று மாஸ்கோவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவித்துள்ளது. ஒரு சில மலேசியர்கள் மட்டும் பண பரிவர்த்தனை சிக்கலை குறிப்பாக மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கான மின்னியல் நிதி பரிமாற்றப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனரேத் தவிர, மற்றபடி பாதுகாப்பாகவே உள்ளனர் என்று இதன் தொடர்பில் மாஸ்கோவில் இருந்து மலேசியத் தூதரகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் தொடர்பில் ரஷ்ய மத்திய வங்கி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


