
காவல் கைதி சிவபாலன் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டாக்டர் கலைவாணர் கேட்டுக்கொண்டார்.
சிவபாலன் மரணம் தொடர்பில் பொலீஸார் கூறும் தகவல்களை நிறைய முரண்பாடுகள் உள்ளன.
உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டறிய அரசாங்கம் மரண விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். காவல் கைதிகள் மரணமடைவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே பலர் இறந்திருக்கிறார்கள். இப்போது சிவபாலன் இந்தப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.
ஆகவே மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும் என அவர் வலியுறுத்தினார்.
