
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தைக் கொண்டு 1MDB கடன் செலுத்தப்பட வில்லை எனும் தன்னுடைய சர்ச்சையான கூற்று தொடர்பில், ஜோகூர் தேர்தலுக்குப் பின் மக்களவையில் விளக்கமளிக்கப் போவதாக, முன்னாள் பிரதமர் டஹ்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
1MDB கடன் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களவையில் பேசியதன் தொடர்பில், விளக்கமளிக்கும்படி அவைத் தலைவர் அஸார் ஹரூன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஜோகூர் தேர்தலுக்குப் பின் தாம் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாக நஜிப் தெரிவித்திருக்கிறார்.
