
ஜோகூர் மாநிலத்தில் மொத்தம் 25 லட்சத்து 99ஆயிரத்து 797 வாக்காளர்கள் பதிவுபெற்றுள்ள நிலையில், நேற்றைய வாக்கெடுப்பில் 14 லட்சத்து 26ஆயிரத்து 573 வாக்காளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்; இதில் 5லட்சத்து 99ஆயிரத்து 753 வாக்காளர்கள் மட்டுமே தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 8,26,820 வாக்காளர்கள், அதாவது 57 விழுக்காட்டினர் தேசிய முன்னணியைப் புறக்கணித்துள்ளனர். மொத்தத்தில் 25, 99,797 ஜோகூர் வாக்காளர்களில் கால் பங்கிற்கும் குறைவாக, அதாவது வெறும் 5, 99, 753 பேர் மட்டுமே தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர்; இது, 23.06 விழுக்காடுதான். கால்பங்குகூட இல்லை. இனியாவது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.
