
இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் படலத்தில் களம் இறங்கி இருக்கும் பேரா சுங்கை சிப்புட்டை சேர்ந்த பிரவீனா கிட்ஸ் கால்பந்து அகாடமி 80க்கும் மேற்பட்ட இளம் வீரர்களுக்கு கால்பந்து பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் நட்சத்திர கால்பந்து வீரர்களை உருவாக்க தீவிரம் காட்டிவரும் இந்த கால்பந்து அகாடமியை பயிற்றுநர் மனோ வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
இதில் இரண்டு பெண்களும் பயிற்சி பெற்று வருவதாக அவர் சொன்னார்.
இந்த கிளப்பில் இணைய விரும்பும் இளம் விளையாட்டு வீரர்கள் 012- 5187538 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.



