
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சிறுத்தொழில் வணிகர்களுக்கு உதவ Sitham அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஷியா இஸ்மாயில் தலைமையில் இந்த அமைப்பு பல இந்திய சிறுதொழில் வணிகர்களுக்கு உதவி வருகிறது.
சிறுத்தொழில் வியாபாரம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு தேவையான பொருட்களையும் இந்த அமைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரவாங்கைச் சேர்ந்த மோகனா ரூபிணிக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை Sitham வழங்கியுள்ளது.
ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட், கவுன்சிலர் எண்டி, கிராமத் தலைவர் விமல் மற்றும் கெஅடிலான் இளைஞர் பிரிவு தேசிய உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் ஆகியோர் இவருக்கு கனிமா நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி உதவி புரிந்துள்ளார்.
