
மனிதர்களில் ஒருசில தரப்பினர் மதங்களை முன்வைத்து என்னதான் பூசலையும் பிணக்கையும் ஏற்படுத்தினாலும், மனித மனங்களில் நல்லிணக்க மலர்கள் பூத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
அதற்கான இன்னொரு அண்மைச் சான்று, இமயமலை அடிவாரத்தில் உள்ள குவஹாத்தி பட்டணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இஷ்தியாக் அகமது கான் குடும்பம்.
பீகார் மாநிலம், சம்பரான் மாவட்டத்தில் இராமன் ஆலயத்தை மிகப்பெரிய அளவில் கட்டுவதற்காக திட்டமிடும் ஆலய நிர்மாணிப்புக் குழுவினரின் விளம்பரத்தைப் பார்த்து, சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள தங்களின் நிலத்தை இலவசமாக வழங்க இஷ்தியாக் அகமது கான் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.



