
தம்பி வேலாகுமாரை கொலை செய்த தாக குற்றம் சாட்டப்பட்டு ள்ள அண்ணன் வேலு குமார் பந்திங் தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்த ப்பட்டார்…. நீதிமன்ற த்தில் தமிழில் குற்றுச் சாட்டு வாசிக்கப் பட்டபோது குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த வேலுகுமார் அது தனக்கு விளங்குவதாக தலையை அசைத்து காட்டினார்……. கடந்த மார்ச் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ம் 6 மணிக்கும் இடைப் பட்ட நேரத்தில் கம்போங் செரி சீடிங் வாடகை வீட்டில் தம்பி வேலாகுமாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமுற்ற அண்ணன் வேலுகுமார் கத்தியால் தம்பியை கொலை செய்த தாக நீதிமன்றத்தில் குற்றச் சாட்டு சுமத்தப் பட்டது…..தம்பி போதைப் பொருளைப் பகிர்ந்து கொள்ள மறுத்ததால் அவர் சொந்த அண்ணனால் கத்தியால் குத்தப் பட்டு மரணமுற்றார் என்று விசாரணை யில் தெரிவிக்கப்பட்டது…….. குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்…..வேலுகுமாரின் கொலை வழக்கு விசாரணை வரும் மே 26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது….. இரட்டை யர்களில் ஒருவரான வேலுகுமார் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்…இவரது சார்பில் இதுவரை வழக்கறிஞர் கள் யாரும் ஆஜராகவில்லை.
