25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?- எடப்பாடி பழனிசாமி பதில்

🔥 Views : 7
👁 Reading Now : 27

எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?

பதில்: அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தலைமைக் கழகமும் இணைந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை நானும் ஓ.பி.எஸ்.சும் இணைந்து அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அதற்கு வாய்ப்பில்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது.

கே: சசிகலா குறித்து ஓ.பி.எஸ். கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: அரசியல் வேறு. தனிப்பட்ட முறை என்பது வேறு. சசிகலாவுடன் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. அதனடிப்படையில் ஓபிஎஸ் பேசியுள்ளார். இப்போது ஸ்டாலினுடன் எங்களுக்கு அரசியல் ரீதியாகவே பிரச்சினை உள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்துத்தான்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles